Home>வாழ்க்கை முறை>முகத்தை பளபளப்பாக்கு...
வாழ்க்கை முறை (அழகு)

முகத்தை பளபளப்பாக்கும் கற்றாழை - இந்த க்ரீம் போதும்

bySuper Admin|2 months ago
முகத்தை பளபளப்பாக்கும் கற்றாழை - இந்த க்ரீம் போதும்

இயற்கையான பளபளப்பை தரும் கற்றாழை-கிரீம் ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

முக அழகை பாதுகாக்க கற்றாழை ஜெல் மற்றும் கிரீம் பயன்படுத்தும் முறைகள்

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் முகத்தின் அழகை காக்கும் பொருட்டு சந்தையில் இருந்து விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் பியூட்டி ப்ராடக்ட்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் நம் சமையலறையிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் மாற்ற முடியும் என்பது பலருக்குத் தெரியாது.

அதில் முக்கியமாக, கற்றாழை ஜெல் மற்றும் கிரீம் முகத்திற்கு சிறந்த பராமரிப்பாக கருதப்படுகின்றன.

அழகு நிபுணர்களின் கூற்றுப்படி, கற்றாழை மற்றும் கிரீம் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் பளபளப்பும், மென்மையும் கிடைப்பதோடு, இயற்கையான குளோவும் அதிகரிக்கிறது.

TamilMedia INLINE - 2025-09-09T032324


குறிப்பாக, இரவில் தூங்குவதற்கு முன் கற்றாழை மற்றும் கிரீம் தடவினால், மறுநாள் காலையில் முகம் புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும்.

கற்றாழை மற்றும் கிரீம் கொண்டு ஃபேஸ் பேக்

ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லும், கிரீமும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதில் சிறிது தயிர் மற்றும் நெய் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து பேஸ்டாக மாற்ற வேண்டும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவினால் முகத்தில் தேங்கியுள்ள அழுக்கு நீங்கி, மென்மையான தோற்றத்துடன் பளபளப்பை தரும்.

இதை வாரத்திற்கு 2–3 முறை பயன்படுத்தினால், முக அழகு இயற்கையாக மேம்படும். சந்தையில் கிடைக்கும் ரசாயன கிரீம்களுக்கு மாற்றாக இந்த இயற்கை பேக் பாதுகாப்பானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

Tamilmedia.lk