மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏன்?
மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணம்
ஹார்மோன் சமநிலை குறைபாடு, தைய்ராய்டு கோளாறுகள் மற்றும் கருப்பை நோய்கள் முக்கிய காரணம்
பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் சில நேரங்களில் சாதாரண அளவை விட அதிக இரத்தப்போக்கு நிகழ்வது வழக்கமான பிரச்சனையாகும். மருத்துவ ரீதியில் இதனை Menorrhagia என்று அழைக்கப்படுகிறது. இது உடல்நலம், வாழ்க்கை முறை, மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணிகளால் ஏற்படக்கூடும்.
முதன்மையாக, மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் (ஈஸ்ட்ரஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன்) ஏற்படும் சமநிலை குறைபாடு, கருப்பையில் உள்ள அடர்த்தியான படலம் அதிகமாக வளரும் நிலைக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது.
மேலும், கருப்பையில் ஏற்படும் பைப்ராய்டு (fibroids), பாலிப் (polyps) போன்ற வளர்ச்சிகள் கூட அதிக இரத்தப்போக்கிற்கான காரணமாக இருக்கும். சில சமயங்களில் Endometriosis எனப்படும் நோய், அதாவது கருப்பை உள் சுவரில் இருக்கும் திசுக்கள் வெளியே வளர்ச்சி அடையும் பிரச்சனையும் அதிக ரத்தப்போக்கை தூண்டும்.
இதேபோல, கர்ப்பப்பையில் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் ஏற்படும் பாதிப்புகள், சிசேரியன் பின் ஏற்பட்ட மாற்றங்கள், மற்றும் சில வகை கருப்பைக் கருவிகள் (IUD – intrauterine devices) கூட அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தக் காரணமாகின்றன.
இரத்த உறைவு (blood clotting) தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும், மாதவிடாய் நீண்ட நாட்களுக்கு நீடித்து அதிகமாக வரும் வாய்ப்பு உண்டு.
மற்றொரு முக்கிய காரணம், தைய்ராய்டு சுரப்பி கோளாறுகள். தைய்ராய்டு சுரப்பி சரியாக செயல்படாதபோது, ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு அதிக மாதவிடாய் ஏற்படுகிறது.
சில சமயங்களில் அதிக மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, மற்றும் மரபு வழியாக வரும் பிரச்சனைகளும் அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|