Home>ஜோதிடம்>எந்த ராசிக்கும் தேர்...
ஜோதிடம்

எந்த ராசிக்கும் தேர்வில் வெற்றி பெற பரிகாரம்

bySite Admin|3 months ago
எந்த ராசிக்கும் தேர்வில் வெற்றி பெற பரிகாரம்

மாணவர்களுக்கு தேர்வில் சிறந்து விளங்க தனித்துவமான ஜோதிட பரிகாரங்கள்

மனஅமைதியுடன் தேர்வில் வெற்றி பெற ஒவ்வொரு ராசிக்கும் பரிகாரங்கள்

மாணவர்கள் தேர்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின், ஆசிரியர்களின், முக்கியமாக மாணவர்களின் பெரும் விருப்பம்.

ஆனால் சில சமயம் அதிகமாக படித்தாலும், பதற்றம், கவலை, கவனச்சிதறல் காரணமாக எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகிறது.

ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களைச் செய்வதன் மூலம் மனஅமைதி கிடைத்து, தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம் என கருதப்படுகிறது.

TamilMedia INLINE (13)


மேஷம்

செவ்வாய் பகவானின் ஆசியுடன், வாரம் தோறும் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். காய்ந்த மிளகாய் படைத்தால் சோர்வு குறைந்து, கவனச்சேர்க்கை அதிகரிக்கும்.

ரிஷபம்

லட்சுமி மற்றும் விஷ்ணு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமை வழிபாடு, மன உறுதியையும் அமைதியையும் தரும்.

மிதுனம்

புதன் ஆளும் ராசியினர்கள் பதற்றம் அதிகம் அடைவார்கள். காலை பூஜையில் கையில் 3 ஏலக்காய் வைத்து, சரஸ்வதி நாமத்தை 21 முறை ஜபிக்க வேண்டும். இது கவனச்சேர்க்கையை அதிகரிக்கும்.

கடகம்

சிவபெருமானை வணங்குவது சிறந்தது. திங்கட்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்வது அச்சத்தை நீக்கி, மன நம்பிக்கையை தரும்.

கன்னி

வீட்டில் உள்ள துளசி மாடத்தை வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜிக்க வேண்டும். இதனால் கல்வியில் தொடர்ச்சியான முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம்

விநாயகரை வணங்குவது சிறந்தது. வாரம் இரண்டு முறை அரச மர அடியில் பிள்ளையாரை வழிபட்டு, அருகம்புல் மாலை சாத்தினால், கல்வி முன்னேற்றம் கிடைக்கும்.

தனுசு

பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளிக்க வேண்டும். இது கவனச்சிதறலை குறைத்து, கல்வி மீது ஆர்வத்தை அதிகரிக்கும்.

மகரம்

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள் சாதம் படைத்து வழிபட வேண்டும். இதனால் கடின உழைப்பு பலன் தரும்.

கும்பம்

இந்த ராசியினர் இலக்கு நோக்கி செல்வார்கள் ஆனால் அலட்சியம் காரணமாக மதிப்பெண் குறையும். தினசரி தியானம் மற்றும் ஜபம் செய்வது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.


மீனம்

மீன ராசியினர் சுட்டி மாணவர்கள் என்றாலும், சில சமயம் எதிர்பாரா தடைகள் வரும். வீட்டில் ராசி மீன் வளர்த்து வந்தால் கல்வி வளர்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.

தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவது படிப்பு, உழைப்பு, கவனம் ஆகியவற்றோடு, மனஅமைதி மற்றும் தன்னம்பிக்கையும் தேவை.

ஜோதிட பரிகாரங்கள் ஒரு கூடுதல் உதவியாக செயல்படலாம். மாணவர்கள் இவற்றை பின்பற்றி நம்பிக்கையுடன் செயல்பட்டால், தேர்வில் சிறந்து விளங்கலாம்.