உலக வெப்பமயமாதல் - நாளுக்கு நாள் மோசமடையும் நிலை
உலக வெப்பநிலை ஏன் அதிகரிக்கிறது?
காலநிலை மாற்றம் - உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்
உலக வெப்பமயமாதல் என்பது இன்று உலகம் முழுவதும் கவலைப்பட வைக்கும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனை.
விஞ்ஞானிகளின் தகவல்படி, கடந்த நூற்றாண்டை ஒப்பிடும்போது இன்று பூமியின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸால் அதிகரித்துவிட்டது.
இந்த வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் மனிதர்கள் அதிகமாக உபயோகிக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் தான். இவை எரியும் போது காற்றில் அதிகளவு கார்பன் டையாக்சைடு சேர்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சூரியனின் வெப்பம் பூமியில் சிக்கிக் கொண்டு, வெப்பநிலை அதிகரிக்கிறது. இதுவே "கிரீன் ஹவுஸ் எஃபெக்ட்" என்று அழைக்கப்படுகிறது.
இதன் விளைவாக பனிக்கட்டி மலைகள் உருகி கடல்மட்டம் உயருகிறது. பல நாடுகளில் கடலோரப் பகுதிகள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.
மேலும், வறட்சி, வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன.
உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது, காலநிலை மாற்றம் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் உணவு தட்டுப்பாடு, நீர் பற்றாக்குறை, நோய் பரவல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கார்பன் உமிழ்வை குறைப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) பயன்படுத்துவது, மரங்களை அதிகமாக நட்டல் போன்ற நடவடிக்கைகள் அவசியம்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் சிறிய மாற்றங்களைச் செய்தால் கூட உலக வெப்பமயமாதலைக் குறைக்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|