கல்விக் கடனை செலுத்த முக்கியமான குறிப்பு இதோ..!
வெளிநாடுகளில் உயர் கல்வி: கல்விக் கடனை செலுத்த 5 முக்கியமான டிப்ஸ்!
இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
உலகத் தரமான கல்வி, நவீன தொழில்நுட்பங்களை அடைவது, வேலைவாய்ப்புகள் அதிகம் என்பவை இதற்கான முக்கிய காரணங்கள்.
இதனை நன்கு புரிந்த பெற்றோர்களும், தங்களுடைய பிள்ளைகளுக்காக கல்விக் கடன் பெற தயார் நிலையில் உள்ளனர்.
அந்த வகையில், கல்விக் கடனை சுமையாக இல்லாமல் புத்திசாலித்தனமாகக் கையாள 5 முக்கியமான நிதி டிப்ஸ் இதோ:
ஆரம்பத்தில் நிதி அறிவு அவசியம்
மாணவர்கள் சிறுவயதில் இருந்தே பணம் பற்றிய அடிப்படை அறிவை பெற்றால், அவர்கள் கடன்களை சிறப்பாகக் கையாளலாம். பெற்றோர்கள் உண்டியல் வழியாக சேமிப்பு, தனி செலவுகளுக்கான பட்ஜெட், விலை மதிப்பீடு போன்ற விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். இது பெரிய வயதில் நிதி சுதந்திரத்திற்கு வழிகாட்டும்.
திட்டமிடப்பட்ட வரவு-செலவுக் கணக்கு
வெளிநாடுகளில் படிக்க திட்டமிடும்போது கல்விக் கட்டணம், தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து, இன்சூரன்ஸ், unexpected செலவுகள் போன்ற அனைத்தையும் கணக்கிட வேண்டும். குடும்ப ஆதரவு, பார்ட் டைம் வேலை, கல்விக் கடன் போன்ற வருவாய் வழிகளை இணைத்து ஒரு முழுமையான நிதி திட்டம் தயாரிக்க வேண்டும்.
சலுகைகளைப் பயன்படுத்துங்கள், சேமியுங்கள்!
மாணவர்களுக்கு தனிப்பட்ட சலுகைகள் பல உள்ளன – போக்குவரத்து, மென்பொருள், உணவகம், ஆடைகள் என பல துறைகளில் ஸ்டூடன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஸ்டூடன்ட் ஐடி கார்டை சரியான முறையில் பயன்படுத்தி, அதிகமான செலவுகளை தவிர்க்கலாம்.
கல்விக் கடன் வகைகள் – புரிந்து கொள்வது அவசியம்
கடன்கள் பொதுவாக அடமானம் தேவைப்படும் (Secured) மற்றும் அடமானமின்றி (Unsecured) என இரண்டு வகை. பெற்றோர் மற்றும் மாணவர்கள், சொத்துகள், வருமான நிலை, வட்டி வீதம் போன்றவற்றைப் பொருத்து ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும்.
கடனை திருப்பிச் செலுத்தும் திட்டம் முக்கியம்
படிப்பு முடிந்தவுடன் கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க ஒரு திட்டம் இருக்க வேண்டும். வட்டி இல்லாத கால அவகாசத்தில் கூட சிறு தொகையை செலுத்தத் தொடங்குங்கள். இது கிரெடிட் ஸ்கோருக்கு நல்லது.
மேலும் Emergency Fund உருவாக்கி, வேலை கிடைக்காத காலத்திலும் EMI-ஐ தவறாமல் செலுத்தும் நிலையை உருவாக்குங்கள்.
வெளிநாடுகளில் உயர்கல்வி என்பது ஒரு கனவு – ஆனால் அதற்கான நிதி நிர்வாகம் சீராக இருந்தாலே, அது வெற்றியடையும். கல்விக் கடனை புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, பொறுப்புடன் செலுத்தும் மாணவர்கள், எதிர்காலத்தில் நிதி சுதந்திரம் மற்றும் நலமுடன் வாழ முடியும்.