Home>தொழில்நுட்பம்>இரவு கைபேசியுடன் தூங...
தொழில்நுட்பம்

இரவு கைபேசியுடன் தூங்கினால் ஆபத்து!

bySite Admin|3 months ago
இரவு கைபேசியுடன் தூங்கினால் ஆபத்து!

இரவில் கைபேசி அருகில் வைத்து தூங்கினால் உடலுக்கு என்ன ஆகும்?

இரவு நேரத்தில் கைபேசியுடன் தூங்கினால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்

நவீன காலத்தில் தொலைபேசி எங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகி விட்டது. காலையில் கண் திறந்தவுடன் முதலில் எடுப்பது கைபேசியே, இரவில் தூங்கும் நேரத்திலும் அதை கையில் வைத்துக்கொண்டு உலாவுவது பலருக்கும் பழக்கமாகி விட்டது. ஆனால், கைபேசியை தலையணையின் கீழ் அல்லது அருகில் வைத்து தூங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை பலர் கவனிக்கவே மாட்டார்கள்.


தலையணையின் கீழ் கைபேசி


முதலில், மொபைல் போனில் இருந்து வெளிப்படும் radiation (மின்காந்த அலைகள்) நம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இரவு நேரத்தில் போன் அருகில் இருந்தால், அந்த radiation உடலில் நுழைந்து நீண்ட காலத்தில் மூளை, இதயம் போன்ற உறுப்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

TamilMedia INLINE (24)



அடுத்ததாக, கைபேசி அருகில் இருப்பதால் நம் தூக்கத் தரம் குறையும். இரவில் போன் சத்தம், vibration, அல்லது அறிவிப்பு ஒலி வந்தாலே மூளை முழுமையாக ஓய்வெடுக்க முடியாது. இதனால் நீண்ட காலத்தில் தூக்கமின்மை, மனஅழுத்தம், தலைவலி போன்றவை ஏற்படும்.

மேலும், படுக்கையில் போன் திரையை நேராக பார்க்கும் பழக்கம் கண் நலனையும் பாதிக்கும். போன் வெளிச்சத்தில் இருக்கும் நீல ஒளி (Blue Light) கண்களுக்கு தீங்கு விளைவித்து பார்வை குறைவு, கண் வலி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

முக்கியமாக, பல ஆய்வுகள் தெரிவிப்பதாவது, இரவு நேரங்களில் கைபேசியை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கிறது. தூக்கத்திற்கு அவசியமான melatonin என்ற ஹார்மோன் சுரக்காமல் போனால், உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் அபாயம் போன்றவை உருவாகும்.

எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு படுக்கைக்கு செல்லும் முன் குறைந்தது 30 நிமிடங்கள் முன்பே கைபேசியை விட்டு வைக்க வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்தி, தூங்கும்போது கைபேசியை விமான (airplane) முறையில் வைத்தால் radiation தாக்கம் குறையும்.

தற்காலிகமாக கைபேசியை அருகில் வைத்துக்கொள்வது சுலபமாக தோன்றலாம். ஆனால், நீண்ட காலத்தில் அது நம் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு மிகப்பெரியது. எனவே, நம் நலனுக்காகவே இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

TamilMedia INLINE (25)