Home>இலங்கை>மருந்து விலை நிர்ணயம...
இலங்கை

மருந்து விலை நிர்ணயம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

byKirthiga|18 days ago
மருந்து விலை நிர்ணயம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

மருந்துகளுக்கான அதிகபட்ச விலை வரம்பு கொண்டு வரப்படும் – அமைச்சர் நளிந்தா

மருந்துகளுக்கான புதிய விலை நிர்ணயக் கூற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

மருந்துகளுக்கான விலை நிர்ணயக் கூற்று நேற்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிச்ச தெரிவித்ததாவது, புதிய விதிமுறைகளின் கீழ் ஒவ்வொரு வகை மருந்திற்கும் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயிக்கப்படவுள்ளதாக கூறினார்.

இதற்கிடையில், ‘சுவாசேரியா’ ஆம்புலன்ஸ் சேவையின் பெயரிலும் நிறத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும் சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்.