கீரி சம்பா அரிசி விலை மோசடி - அபராதம்
கீரி சம்பா அரிசி அதிக விலையில் விற்ற கடைகளுக்கு அபராதம்
களுத்துறை, பாணந்துறை மற்றும் ஹோரணை கடை உரிமையாளர்களுக்கு அபராத உத்தரவு
கீரி சம்பா அரிசியை அதிக விலையில் விற்றதாக இரு வர்த்தகர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு, தலா ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலுத்துறை மற்றும் பாணந்துறை நீதவான் நீதிமன்றங்கள் இதற்கான உத்தரவை வழங்கியுள்ளன.
இதற்கிடையில், ஹோரணை நீதவான் நீதிமன்றம், ஹோரணை – பொறுவடண்டையில் உள்ள ஒருவருக்கு கீரி சம்பா அரிசி கையிருப்பை மறைத்த குற்றச்சாட்டில் ரூ.20,000 அபராதமும், அவரது வசமிருந்த 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை அரசுக்குச் சிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
களுத்துறை நாகோடையில் உள்ள ஒரு கடை உரிமையாளர் கீரி சம்பா அரிசியை கிலோவுக்கு ரூ.310க்கு விற்றதாக ஒப்புக்கொண்டதையடுத்து, கலுத்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (03) அவருக்கு ரூ.100,000 அபராதம் விதித்துள்ளது.
மேலும், பாணந்துறை சரிக்கமுல்ல பகுதியில் உள்ள ஒரு கடை, கீரி சம்பா அரிசியை கிலோவுக்கு ரூ.300க்கு விற்றதாக நிரூபிக்கப்பட்டதால், பாணந்துறை நீதவான் நீதிமன்றமும் அதேபோல் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளது.
இவ்வாறு கலுத்துறை, பாணந்துறை மற்றும் ஹோரணை நீதவான் நீதிமன்றங்கள் தங்களது பிரதேசங்களில் விசாரணை மேற்கொண்டு, அக்டோபர் 2 மற்றும் 3 தேதிகளில் இந்த உத்தரவுகளை வழங்கியதாக அடதெரணா செய்தி குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|