Home>இலங்கை>இராமநாதபுரத்தில் வெட...
இலங்கை

இராமநாதபுரத்தில் வெடிக்காத பீப்பாய் செல் கண்டுபிடிப்பு

byKirthiga|about 2 months ago
இராமநாதபுரத்தில் வெடிக்காத பீப்பாய் செல் கண்டுபிடிப்பு

இராமநாதபுரம் பகுதியில் வெடிக்காத பீப்பாய் செல் கண்டுபிடிப்பு

யுத்தகாலத்தில் ஏவப்பட்ட பீப்பாய் செல் இராமநாதபுரம் பகுதியில் இனங்காணப்பட்டது

இராமநாதபுரம் போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட 10 வீட்டு பகுதியில் யுத்தகாலத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் ஏவப்பட்டதாக கருதப்படும் வெடிக்காத நிலையில் இருந்த பீப்பாய் செல் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தன் காணியை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக உடனடியாக இராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சூழலை ஆய்வு செய்துள்ளனர்.

Selected image


பின்னர், கிளிநொச்சி நீதிமன்ற நீதவனின் அனுமதியுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதுவரை சம்பவ இடத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

யுத்த காலத்திலிருந்து மீதமுள்ள வெடிக்காத ஆயுதங்கள் இன்னமும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன.

இத்தகைய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது அவசியம் எனவும் பாதுகாப்பு பிரிவினர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Selected image

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்