Home>உலகம்>உலகின் உயரமான பாலம் ...
உலகம்

உலகின் உயரமான பாலம் சீனாவில் திறப்பு

byKirthiga|about 1 month ago
உலகின் உயரமான பாலம் சீனாவில் திறப்பு

குயிசோவில் திறக்கப்பட்ட ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் உலக சாதனை

625 மீட்டர் உயரத்தில் அமைந்த பாலம் பயண நேரத்தை குறைத்தது

தென் மேற்கு சீனாவின் குயிசோ மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை உலகின் உயரமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இது அந்தப் பிராந்தியத்தின் கிராமப்புற அடிக்கட்டு வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

பெய்பான் நதியின் ஹுவாஜியாங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் நீர்மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 1,420 மீட்டர் நீள பிரதான இடைவெளியுடன், மலைப்பகுதியில் கட்டப்பட்ட பாலங்களில் இது மிக நீளமானதாகும்.

இந்தப் பாலம் குயிசோவின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் முக்கியக் கண்ணியாக செயல்படுகிறது. முன்னதாக இரு கரைகளுக்கு இடையே பயணம் செய்ய இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், இப்போது அது வெறும் இரண்டு நிமிடங்களாக குறைந்துள்ளது. இதன் திறப்புடன் லியூஷி சிறப்பு மாவட்டம் மற்றும் அன்லாங் கவுண்டியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


Selected image


2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பாலம், குயிசோவின் கடினமான புவியியல் நிலைப்பாட்டை சமாளிக்க உருவாக்கப்பட்டது. குயிசோ மாகாண போக்குவரத்து துறையின் தகவலின்படி, அங்கு இதுவரை 32,000க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன மற்றும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகின் 100 உயரமான பாலங்களில் கிட்டத்தட்ட பாதி குயிசோவில் உள்ளன என்பது சிறப்பம்சமாகும்.


Selected image


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்