இலங்கை
கொட்டாவையில் இளைஞர் கைது- துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்
byKirthiga|about 1 month ago
கொட்டாவையில் 400-க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள், ஹெரோயின் பறிமுதல்
458 துப்பாக்கி குண்டுகள், ஹெரோயின் வைத்திருந்த 24 வயது இளைஞர் கொட்டாவையில் கைது
கொட்டாவை பகுதியில் போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் (STF) நடத்திய சோதனையில், 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 458 துப்பாக்கி குண்டுகள், ஒரு T-56 துப்பாக்கி மாசுகசின், 75 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 30 போலி வாகன எண் பலகைகள், 15 வருவாய் உரிமங்கள், 15 காப்பீட்டு சான்றிதழ்கள் மற்றும் 2 கைப்பேசிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர் மோரட்டுவா, அங்குலானா பகுதியைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|